வடக்கில் குழப்பமான கதவடைப்பு!

கிழக்கில் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வடக்கிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் சில இடங்களில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குழப்பமான செய்தியால் வடக்கில் தடுமாற்றமான நிலைமையே காணப்படுகிறது.

வடக்கின் சில பிரதேசங்களில் கதடைப் இடம்பெறுகிறது. சில பகுதிகளில் இடம்பெறவில்லை. பாடசாலைகளிலும் இதே குழப்பமான நிலைமைதான் நீடிக்கிறது.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் இன்று பாடசாலைகள் இயங்குகின்றன. எனினும், மாணவர் வரவு குறைவாக உள்ளது. அதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் கதவடைப்பு இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் அனைத்து செயற்பாடும் வழக்கம் போல இடம்பெறுகிறது. பாடசாலைகள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் இயங்குகின்றன. காவடைப்பு இடம்பெறவில்லை.

வவுனியா

வவுனியாவில் அனைத்தும் வழக்கமாக இயங்குகின்றன. பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் வழக்கம் போல இயங்குகின்றன.

மன்னார்

மன்னாரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிக குறைவாக காணப்பட்டது. பொதுப்போக்குவரத்து சேவைகளும் மிகக்குறைவாகவே இடம்பெற்றன.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலையில் கதவடைப்பு இடம்பெற்றது. எனினும், யாழ் நகரில் காலையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏனைய சில பகுதிகளில் கடைகளை திறப்பதை பற்றி வர்த்தகர்கள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர் வரவு மிக வீழ்சியடைந்துள்ளது. சில பாடசாலைகள் இயங்கவில்லை.