தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார்.மேலும் அவர் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா எப்பொழுதும் சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்.மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நாகசைதன்யாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருவார்.
ஆனால் நாகசைத்தன்யா அவ்வாறு கிடையாது.முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிருவார்.
இந்நிலையில் இதுபற்றி சமந்தா பேட்டி ஒன்றில் கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.






