தனக்குத்தானே தீமூட்டிய நபர்…

வடமராட்சி மந்திகை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இன்று (13) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்று, வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இடத்தில் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

காலை 7.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கொற்றாவத்தையை சேர்ந்த நாகலிங்கம் விஜயகாந்த் (28) என்பவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இன்று தனக்குத்தானே தீ மூட்டினார்.

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று, அருகிலுள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்யென் எடுத்து ஊற்றி தனக்குத்தானே தீ மூட்டினார்.

அவர் எரிந்த தகவல், சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு தெரிவிக்கப்பட்டபோதும், இது பொலிஸ் விசாரணைக்குரிய விடயம் என கூறி மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் அவசர நோயாளர் காவு வண்டியை அனுப்ப மறுத்து விட்டது. பின்னர் 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மாற்றப்பட்டபோது, அங்கு நோயாளர் காவு வண்டி நிற்கவில்லை. பின்னர், நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு மாற்றப்பட்டு, அங்கிருந்தே நோயாளர் காவு வண்டி வந்து, அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.