அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா ராய்….

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் – ஸ்லோக ஆகிய இருவரின் திருமணம் மும்பை ஜியோ சென்டரில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். அழகி ஐஸ்வர்யா ராய் இந்த திருமணத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

காரணம் அவரது இளமை. நீல நிற லெஹங்காவில் மிகவும் பளிச்சென தோற்றத்தில் இருந்தார். அவருடன் மகள் ஆரத்யா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் வந்திருந்தனர்

ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யாவின் அழகு அதிகமாக இருந்ததால் அபிஷேக்கின் அழகை ரசிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

45 வயதிலும் மிகவும் இளமையாக இருக்கிறார் என அவரது அழகை ரசித்துள்ளனர்.