இளம்தந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்! பிள்ளையோடு நிற்கதியாய் நிற்கும் மனைவி!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டடமொன்றில் நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சார இணைப்பில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரண்டு மாடி கட்டிடமொன்றில் சுவர் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.