இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்று அசத்தியது. அதன் பிறகு ஐந்து ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற பெற்றது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், அடுத்து நடக்கும் நான்காவது ஒரு நாள் போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷபான்ட் அணியில் சேர்க்கப்படுவார். மேலும், அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளும் உலககோப்பை போட்டி தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி போட்டி என்பதால் ரிஷாப்பன்டுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என கூறினார்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார் என்று தெரிவித்தார். மேலும், ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அடுத்த போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் நடைபெறும் ஒருநாள் தொடரில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் ஆடி வருகிறது. அடுத்த ஆட்டங்களில் இந்திய அணியில் பங்குபெறும் வீரர்களுக்கு வரும் உலக கோப்பையில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.