இலங்கையர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை ஊடாக இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியா தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என இலங்கை வர்த்தக பிரிவில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது. இதனால் இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ள்து.

இதன் காரணமாக பாகிஸ்தானிற்கான ஏற்றுமதிகளின் தடைகளும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தடையும் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதானமாக பாகிஸ்தானிற்கு தேயிலை, வெற்றிலை, தேங்காய், மிளகு மற்றும் இறப்பர் உட்பட பல தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றது. அந்த ஏற்றுமதியின் பெறுமதி 180000 மில்லியன் ரூபாயாகும்.

இந்தியாவில் இருந்து பல பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தியாவில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு தடை ஏற்பட்டால், இலங்கையில் பொருட்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.