இலங்கை – இந்தியக் கடல் எல்லையில் இரு நாட்டுக் கடற்படையினரும் ஏட்டிக்குப் போட்டியாக இரு நாட்டு மீனவர்களையும் நடுக் கடலில் கைது செய்தமையால் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் பதற்றம் ஏற்பட்டது.
இலங்கை- இந்தியக் கடற்படையினரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துக் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு நேற்றுக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அதேநேரம் இந்திய மீனவர்களால் 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏட்டிக்குப் போட்டியான கைதுகளால் இருநாடுகளின் கடற்பரப்பில் நேற்றுப் பதற்றம் இருந்தது.