உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு ஏற்பட்ட சோகம்..

கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் சென்று தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் . ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் சிரிய நாட்டு அகதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.