தீ விபத்து: தீவிர முயற்சியில் தீயணைப்பு வாகனங்கள்….

மும்பையில் தெற்கு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பையில் தென்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயின் வேகம் மூன்றாவது கட்டத்தை எட்டியதை அடுத்து, 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் பலி மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் குறித்தும் பொலிஸார் கூறவில்லை.

முன்னதாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.