பிரித்தானியரும் பிரான்ஸ் நாட்டவரும் மாயம்!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியரும் ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மாயமாகியுள்ளதையடுத்து அவுஸ்திரேலிய பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Hugo Palmer மற்றும் Erwan Ferrieux என்னும் இருபது வயதுள்ள சுற்றுலாப்பயணிகள் இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

சிட்னிக்கு வடக்கேயுள்ள கடற்கரை ஒன்றில் சில பொருட்கள் அநாதையாக கிடந்ததைக் கண்ட சிலர் பொலிசாருக்கு தகவல் அளிக்க, அங்கு வந்த பொலிசார் அவை Hugo Palmer மற்றும் Erwan Ferrieuxக்கு சொந்தமானவை என்பதை அறிந்தனர்.

சுற்றிலும் தேடியதில் அங்கு இருவரும் வாடகைக்கு எடுத்திருந்த கார் ஒன்று நின்றதைக் கண்டு காரை சோதனையிட்டனர் பொலிசார்.

காரில் இருவருக்கும் சொந்தமான பாஸ்போர்ட் முதலான பொருட்கள் இருந்தன.

இதனையடுத்து பொலிசார் கடலிலும் நிலத்திலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஆனால் எங்குமே இருவரையும் காணமுடியவில்லை.

கடலில் அலைகள் முரட்டுத்தனமாக இருந்ததால் ஒரு வேளை சர்ஃபிங் செய்யப்போன இருவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.