கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் திருமணம் நடைபெற்றது. இதே நாளில் பிரபல காமெடி நடிகரான மனோ பாலாவின் மகன் காமெடி மற்றும் பிரியா ஜோடியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல லீ ராயல் மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இத்திருமணத்தில் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த திருமணம் முடிந்த கையோடு திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றுள்ளனர். அப்போது மணமகள் பிரியா கை ரேகை வைக்க முயன்ற போது இயந்திரம் ரேகை கட்டை விரல் ரேகையை எடுத்துக்கொள்ளவில்லை.
இதற்கு முக்கிய காரணமே மணமகள் பிரியா கையில் மருதாணி போட்டிருந்ததால் அவரது விரல் ரேகையை இயந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் பல முறை அவரது விரலை கழுவி பல நீக்கிய பினரே அவரது விரல் ரேகை இயந்திரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனோ பாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்ததுடன், மற்றவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்படவும் கூறியுள்ளார்.
இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை..கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்..மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது..be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வ
வெளிநாடு செல்பவர்கள்.. pic.twitter.com/Rd1STUyd4g— manobala (@manobalam) February 11, 2019