ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி-யில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார்!

சென்னையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு திதி அளிக்கப்பட்ட நிகழ்வில், நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார்.

கடந்த ஆண்டு துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார். இந்நிலையில், அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் மற்றும் நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் முதலிலேயே கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு ரிஷியும் இதில் கலந்துகொண்டார்.

போனி கபூர் தயாரிக்கும் படங்களில் அஜித்குமார் அடுத்தடுத்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.