பழைய மாணவர் சங்க உறுப்பினர் மாணவன் மீது தாக்குதல்!

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் பாடசாலை முடிவடைந்த பின்னர் வீடு செல்ல முற்பட்ட தரம் 11 மாணவனை வெளிநபர் ஒருவர் ஆசிரியர்கள் முன் தாங்கியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை விட்டு வீடு செல்ல முற்பட்ட தரம் 11 மாணவனொருவனை அப்பகுதியில் நின்ற பழைய மாணவர் சங்க உறுப்பினரொருவர் பாடசாலைக்குள் மீண்டும் இழுத்துச் சென்று ஆசிரியர்களுக்கு முன்பாக வைத்து தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக மாணவர்கள் குழப்பமடைந்ததுடன் ஆசிரியர்களும் குறித்த சம்பவத்துக்கு விசனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் மாணவனை தாக்கியவருக்கு பாடசாலை சமூகம் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க நீதியை நாடவேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தாக்குதல் நடத்தியவர் பழைய மாணவர் சங்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவளை, பாடசாலை வளாகத்தில் நடந்த இச் சம்பவத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்காதும், மாணவன் நலனை கருத்தில் கொள்ளாதும் தாக்கியவரை காப்பாற்ற பாடசாலை சமூகம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.