செல்பி மோகத்தால் உடல் கருகி பரிதாபமாக பலியான சிறுவன்.!!

அலைபேசிகள் நம்மை ஆட்கொண்ட நாட்களில் இருந்து பல இளைஞர்கள் அலைபேசியில் இருக்கும் இணையத்தளங்களில் முழ்ங்கி இருக்கின்றனர். அந்த இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர்., இணையங்களின் அதிகளவில் பின்தொடர்பாளர்களை சேர்ப்பதற்காக பல சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்., சாகசங்களில் ஈடுபடும் பெரும்பாலானோர்களில் பலர் ஆபத்துகளில் சிக்கி சில உயிரிழக்கும் துயரங்களும் அரங்கேறி வருகிறது. செல்பி மோகத்தில் இருக்கும் பலர் எடுக்கும் ஆபத்தான புகைப்படங்களை எடுக்கும் நேரத்தில்., பலர் பரிதாபமாக உயிரிழந்ததை நாம் அறிவோம். அதே வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் துயர் ஒன்று நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஜபுவா மாவட்டத்திற்கு உட்பட்ட பெருகர் இரயில் நிலையத்தில் சிறுவன் மின்சார இரயிலில் பயணம் செய்ய காத்திருந்தார். அந்த நேரத்தில் அங்கிருந்த இரயில் மீது ஏறி அலைபேசியில் புகைப்படம் எடுக்க முயற்சிதான்.

அந்த நேரத்தில்., எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை உயரழுத்த மின் கம்பியில் படவே., சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய நிலையில் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை கண்ட மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெறிக்கவே. தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில் சிறுவனின் பெயர் பங்கஜ் (16) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.