கள்ளத்தொடர்பில் கொடூர உல்லாசம்.!! , இரத்தத்தில் நிறைந்த வீடு.!!

தூத்துக்குடியை சார்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகளான கலாவுக்கு அதே பகுதியை சார்ந்த பெரியசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.

பெரியசாமி திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்த காரணத்தால்., தனது மனைவியை தூத்துகுடியிலேயே விட்டுவிட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். கலா அங்குள்ள பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

அந்த நேரத்தில் அதே பகுதியை சார்ந்த சகாயமணி என்பவருடன் கலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறவே., இருவரும் தனிமையில் சந்தித்து அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த தகவலானது கலாவின் தந்தைக்கு தெரியவரவே., இருவரும் கண்டித்திருந்த நிலையில் இருவரும் அவர்களது தொடர்பை முறித்துவிட மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலாவின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில்., இந்த தகவலை அறியாத இருவரும் மீண்டும் வழக்கம் போல கலாவின் இல்லத்தில் உல்லாசம் மேற்கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கலாவின் தந்தை சகாயமணியை கட்டையால் தாக்கியவுடன் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இதனை கண்ட கலா அறவே., சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கூடியவுடன்., அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதும்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் கலாவின் தந்தை மைக்கேல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.