திடீரென ஏற்பட்ட விபரீதம்! பதறியடித்த மக்கள்

இலங்கையின் பிரதான நகரம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக பிரதேசம் எங்கும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது.

கம்பளை – கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் பஸ் ஒன்று தீக்கிரையாகியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி – கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.