பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளம்பெண்: பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

உக்ரைன் நாட்டில் பேருந்து கட்டணம் செலுத்த தவறியதால் வெளியேற்றப்பட்ட இளம்பெண் ஒருவர் கடும் குளிரில் உறைந்து மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு உக்ரைனில் உள்ள Olevsk நகருக்கு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ள தமது தாயாரை காண 21 வயதான ஐரினா டிவோரெட்கா சென்றுள்ளார்.

ஆனால் பேருந்து கட்டணமான 68p இவரிடம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் ஐரினாவை வெளியேற்றியுள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து ஐரினா சாலை வழியாக நடக்கத் துவங்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து காட்டுவழியாக நடக்கத் துவங்கியுள்ளார். சமீப காலமாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது மட்டுமின்றி சம்பவம் நடந்த அன்று தட்பநிலை -20C என கூறப்படுகிறது.

இதனிடையே காட்டுவழியில் தாம் செல்ல வேண்டிய பாதையை தொலைத்த ஐரினா தடுமாறியுள்ளார். மட்டுமின்றி பள்ளம் ஒன்றில் தடுமாறி விழுந்துள்ளார்.

சோர்வு, பயம் மட்டுமின்றி கடும்குளிர் காரணமாக அந்த பள்ளத்தில் இருந்து நகர முடியாத நிலையில் ஐரினா உறைந்தே மரணமடைந்துள்ளார்.

மகள் மாயமாகி 2 நாட்கள் கடந்த நிலையில் அவரைத் தேடிய ஐரினாவின் தந்தை இறுதியில் தமது மகளின் சடலத்தைக் கண்டு கதறியுள்ளார்.

பேருந்துக்கு தாமதமானதால் ஐரினா பணம் எடுத்துச் செல்ல மறந்துள்ளார். இதனாலையே பேருந்து ஓட்டுனரால் வெளியேற்றப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள பொலிசார் பேருந்து ஓடுனரை கைது செய்துள்ளனர்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.