சென்னை அரும்பாக்கத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம், சிருகுழார் தெருவை சேர்ந்தவர்கள் மகேஷ், கீர்த்திகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில், கீர்த்திகா தனது மகள்களுடன் அரும்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகளை படிக்க வைப்பதற்காக, தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால், கணவன் இறந்த துக்கமும், இரண்டு பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து கரை சேர்ப்பது என்று தெரியாமல் கடும் மனஅழுத்தத்தில் இருந்த கீர்த்திகா, நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் குழந்தைகளுடன் வெளியில் சென்ற நிலையில், திடீரென வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து வெளியில் சென்றிருந்த அவரது தாயாரும், மகள்ளும் வீட்டுக்குள் வந்து கீர்த்திகா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிாச்சியடைந்தனர்.
தொடாந்து இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரும்பாக்கம் போலீசார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






