வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து தொடர்ந்து சமூகவலைதளமான டுவிட்டரில் ஆபாச பேச்சுக்களுக்கு ஆளாகி வருகிறார் பாடகி சின்மயி.
தனக்கு வரும் மோசமான கமெண்டுகளை பிரிண்ட் ஷார்ட் எடுத்தும் தனது டுவிட்டரில் விடாமல் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இணையவாசி ஒருவர் சின்மயிடம் நீங்கள் உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, உங்கள் கணவை தவிர வேறு யாருடனும் நெருக்கமா இல்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் நான் என் கணவரைத் தவிர வேறு யாருக்கும் பத்தினி என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
இதே போன்று மற்றொரு இணையவாசியும் மோசமான கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார். இந்த சேட்களை எல்லாம் சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.