5 வயது குழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை….!

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் தந்தை ஒருவர் தமது 5 வயது குழந்தையின் காலை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அந்த நபர், தமது மகள் அவரது அறையை சுத்தம் செய்ய மறுத்ததாலையே தாம் காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மிசூரி மாகாணத்தின் ஜாப்லின் நகரில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையின் அலறல் கேட்டு அவரது அறைக்கு விரைந்த தாயார் மிஸ்டிக் ஃபோர்ஸி அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மட்டுமின்றி மரண வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுமியின் அருகாமையிலேயே தந்தை லான்ஸ் பிரீடிங்(27) நின்றுகொண்டிருந்துள்ளார்.

பதறித்துடித்த தாயார் குழந்தையை அள்ளியெடுத்துக் கொண்டு முதலுதவி செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் அளித்த அவர் தமது கணவரின் செயல் தொடர்பில் புகார் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், லான்சை கைது செய்துள்ளனர். பின்னர் குழந்தையை மீட்டு 60 மைல்கள் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

லான்ஸ் கைது செய்யப்பட்டு ஜாஸ்பர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.