இணுவிலில் கோர விபத்து…!! 12 வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி…!!

மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ஏனைய மூவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர்.முச்சகரவண்டி இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதிக்கு வந்தடைந்த போது, அந்த நாற்சந்திக்கு மூன்று பக்கங்களாலும் இருந்து வந்த முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதின.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நான்கு பேர் படுகாயமடைந்தனர். எதிரே வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.