தோள்பட்டை, முழங்கை, கைகளில் திடீரென அதிக வலி ஏற்பட்டுகின்றதா? இந்த நோயாக இருக்கலாம்…

நம்மில் பலருக்கு தோள்பட்டை, முழங்கை, கைகள் மற்றும் மணிக்கட்டு போன்ற ஏதாவது ஒரு பகுதியில் திடீரென அதிக வலி ஏற்பட்டு எந்த ஒரு பொருளையும் அசைக்க முடியாத நிலை ஏற்படுவது போன்றவை முடக்கு வாதத்திற்கான அறிகுறியாக விளங்குகின்றது

முடக்கு வாதம் என்பது மூட்டிலுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவதாகும்.

முடக்கு வாதம் முதன்மையாக மூட்டுகளைத் தாக்குகிறது என்றாலும், உடலின் பிற உறுப்புகளிலும் இந்நோய் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றது.

நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே பொதுவாக இந்த நோய் ஏற்படுகிறது. பிள்ளைகளை மிகவும் அரிதாகவே இந்த நோய் தாக்கும். பரம்பரையாக ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு மிக அரிதாகவே கடத்தப்படலாம்.

இதனை ஊசி மூலம் குணப்படுத்துவதை விட இயற்கை முடியில் குணப்படுத்துவதே சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  • முந்தைய இரவில் வெந்தயம் 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது நீரில் ஊற வையுங்கள். மறு நாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும் பாதிக்கப்பட்ட இடங்களில் வலி குறையும்.
  • பூண்டு முடக்கு வாதத்திற்கான மிகச் சிறந்த மருத்துவ உணவு. 2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது முடக்கு வாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.
  • ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும். இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும். இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.
  • விளக்கெண்ணெயை சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை லேசாக சூடுபடுத்தி மசாஜ் செய்யுங்கள். இவை வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.
  • கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது யூரிக் அமிலத்தை குறைக்கச் செய்கிறது. இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து , மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவாகும்.
  • தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம் கீல் வாதம் ஆகியவை வராமல் தடுக்கலாம்.
  • இஞ்சி எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். முடக்கு வாதத்தின் மற்ற பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.
  • முடக்கு வாதம் உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், வலியிருந்து விடுபடலாம்.
  • பாரிஜாதத்திலிருந்து எடுக்கப்படும் சாறினை பருகிவந்தால், முடக்கு வாதத்தால் வரும் வலி மறைந்தே போய்விடும்.
  • பயன்படுத்தப்படுகிறது. தினமும் உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், முடக்கு வாதத்திற்கான வலி குறையும் என ஆயுர்வேதம் சொல்கிறது.