என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் கனவில் வந்து சொன்னால் என்ன பலன்?

இன்றைய ஜோதிட பகுதியில், மக்களின் சில கேள்விகளிலும், அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

* என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் கனவில் வந்து சொன்னால் என்ன பலன்? – என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண் சொல்வது போல் கனவு வருவது செய்த உதவிகளால் அவப்பெயர் நேரிடலாம் என்பதைக் குறிக்கிறது.

* 3 பேர் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்? – மூன்று பேர் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

* கனவில் அகத்தியர் கோவிலில் மஞ்சள் குங்குமம் பெற்றேன். அதே இடத்தில் உள்ள முருகன் கோவிலில் குங்குமம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன பலன்? – கனவில் அகத்தியர் கோவிலில் மஞ்சள், குங்குமம் பெற்று, அதே இடத்தில் உள்ள முருகன் கோவிலில் குங்குமம் கிடைக்கவில்லை என்பது இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. இருப்பினும், பணியில் கவனம் வேண்டும்.