வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்ற பின் உரையாற்றும் போது வடக்கு மாகாண ஆளுநர் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.புதிய வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இன்று யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடமாகாண ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்ட நிலையில், புதிய ஆளுநராக சுரேன் ராகவன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று காலை வட மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன் காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வினை தொடர்ந்து புதிய ஆளுனரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









