தனது மனைவியைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபர் தனது வயிற்றைப் பிளேட்டினால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் நடந்துள்ளது.
வீமன்காமத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஒருவர் தன்னுடைய மனைவியை காணவில்லை அவரைக் கண்டு பிடித்துத் தருமாறு கூறி, முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் தன்னுடைய உடமையில் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தனது வயிற்றை வெட்டியுள்ளார்.
அவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.