200 ரூபாய்க்காக கொடூரமிருகமாய் மாறிய கணவன், துடிதுடித்து போன மனைவி!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுபிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து சுபிதா 3-வது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார்,. மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டன் வீட்டில் தான் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என மனைவி சுபிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் எடுக்கவில்லை, எனக்கு தெரியாது என கூறியுள்ளார். அதை நம்பாத மணிகண்டன், மனைவி சுபிதாவை கடுமையாக அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுபிதா அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணியான சுபிதா உயிரிழந்தார்.

பின்னர் தகவலறிந்த போலீசார்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு , 200 ரூபாய்க்காக கணவன் 5 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.