சொத்துக்காக பெற்றதாயையே அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரமகன்!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார். இவருக்கு பார்வதி (60) என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் இருந்துள்ளனர்.

நடராஜன் தான் இறப்பதற்கு முன்பாகவே சொத்து தகராறு வரக்கூடாது என்பதற்காக, தனது சொத்துக்களை மகன்கள், மகளுக்கு முறையாக பிரித்து எழுதி கொடுத்து விட்டார். வேதகோவில் தெருவில் உள்ள பூர்வீக வீட்டை மட்டும் தனது மனைவி பார்வதி பெயருக்கு எழுதி கொடுத்திருந்தார். நடராஜனின் இறப்பிற்கு பிறகு பார்வதி அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஆனால், அவர்களின் மூத்த மகன் சிவகாமிநாதன் என்பவர் அந்த பூர்வீக வீட்டை தனக்கு எழுதி தருமாறு பார்வதியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். ஆனால் மறுத்த பார்வதி தனது இறப்பிற்கு பிறகு எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத மூத்தமகன் அடிக்கடி தாயாரிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். மீண்டும் நேற்று இரவு சொத்து தொடர்பாக இருவருக்குமிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சிவகாமிநாதன் தாய் என்றும் பாராமல் பார்வதியை சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதனால் மிகுந்த காயமடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பார்வதியின் மற்றொரு மகன் புதுராஜா போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்துக்காக தாயை கொன்ற சிவகாமிநாதனை கைது செய்தனர்.