பலரை திக்குமுக்காட வைத்த சம்பந்தன்!

எதிர்கட்சி தலைவர் யார் என்பதில் தற்போது பிரச்சினை இல்லை என முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் நாடாளுமன்றம் பெரும்பான்மை என்ற சம்பிரதாயத்திற்கமைய செயற்படுவதாக சபநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார் என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால் எதில் கட்சி தலைவர் தாங்கள் தான் என்ற நம்பிக்கை இல்லை என ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தனிடம் வினவினார்.

அதனை நம்புவதா இல்லையா என்பது எங்களுக்கான கேள்வி அல்ல. மஹிந்த தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவாரா என்பது தான் எங்களின் கேள்வி என சம்பந்தன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.