96 பேருக்கு மரண தண்டனை! பொலிஸார் வெளியிட்ட காரணம்

2008 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 34 பெண்கள் உள்ளிட்ட 275 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஹெரோயின், கொக்கையின், மார்பின் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள் வைத்திருந்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு 5,166 மில்லியன் ரூபா பெறுமதியான 430.5 கிலோ ஹொரேயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 37,304 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு 231.5 கிலோ நிறையுடை இரண்டாவது பெரிய ஹெரோயின் போதைப்பொருளும், 103 கிலோ நிறையுடை ஐந்தாவது பெரிய ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.