நிச்சியக்கப்பட்ட பெண்ணுடன் கடலையோ கடலை.!! கல்யாண நாளில் கம்பி நீட்டிய மணமகன்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு காந்திநகரை சார்ந்தவர் மனோஜ் (25)., இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர் பட்டிவீரன்பட்டி. இந்த பகுதியை சார்ந்தவர் தனலட்சுமி (வயது 22).

இவர்கள் இருவருக்கும் சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உனக்கு நான் தான் என்று உறுதியானதை தொடர்ந்து இருவரும் அலைபேசியின் வாயிலாக பேசி வந்துள்ளனர்.

அலைபேசியின் மூலம் பெரும் போதே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 மாதங்களும் கழியவே வத்தலக்குண்டில் வைத்து திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு மாப்பிளையை அழைத்து செல்வதற்கு தயாராகி மாப்பிளை அழைப்பு நடைபெற்றது.

அந்த சமயத்தில் திடீரென இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும்., பெண்ணை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார் அதிர்ந்து போகவே., மணமகன் வீட்டார் மாப்பிள்ளையை சமாதானம் செய்ய முயற்சியுள்ளனர்.

எந்த விசயத்திற்கும் மாப்பிளை செவி சாய்க்காததால்., சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மணமகள் வீட்டார் சார்பில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இருவீட்டாரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.