ஆஸ்துமா பிரச்சனையால் இருமல், இரைப்பு, மூச்சுத்திணறல், மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கான நிரந்தரத் தீர்வாக சுவாசகோச எனும் முத்திரை உதவுகிறது.
சுவாசகோச முத்திரை செய்வது எப்படி?
- சுண்டு விரலால் கட்டை விரலின் அடி ரேகையையும், மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையையும் தொட வேண்டும்.
- அதன் பின் நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியை தொட்டு ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்ட வேண்டும்.
- இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் கையை கவிழ்த்து அல்லது கீழ்நோக்கி வைக்கக் கூடாது.
- இந்த முத்திரையை விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ, கால்களை தரையில் ஊன்றியோ மற்றும் படுத்த நிலையிலோ செய்யலாம்.
- ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 முறைகள் செய்யலாம். இரைப்பு, இருமல் உள்ளவர்கள் அவைகள் குறையும் வரை செய்து கொண்டே இருக்கலாம்.
- தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த முத்திரையை செய்யலாம்.
பலன்கள்
- ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதங்களில் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறையும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இருமல் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும்.
- தினமும் இவ்வாறு செய்வதின் மூலம் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்பட்டு மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் அடைப்பு ஆகியவை குறையும்.






