முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு நிற துணியில் “தமிழீழம் எங்கள் தாயடா” என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.இன்றைய தினம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், இந்த கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டுள்ளது.
இதை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த புலிக்கொடியை அகற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.