வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய மனைவி: ஆசையாக காண சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அவரின் கணவர் புகார் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங் (28). இவர் மனைவி ரமன்கீத் கவுர் (25). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ரமன்கீத் கடந்த ஆகஸ்ட் மாதம் துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஊருக்கு திரும்ப முடிவெடுத்தார்.

அதன்படி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு தனது விமானம் வரும் என்றும் அங்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறும் கணவர் குர்மீத்துக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் தனது விசாவில் பிரச்சனை இருப்பதாகவும் கூறினார். அதன்படி விமானநிலையத்துக்கு குர்மீத் சென்ற நிலையில் விமானத்தில் அவர் மனைவி வரவேயில்லை.

இதனால் பதறிபோய் அவர் துடித்து பொலிசில் புகார் அளித்தார். இது குறித்து பொலிசார் கூறுகையில், நாங்கள் சிசிடிவியில் பதிவான காட்சிகளை குர்மீத்துக்கு காட்டினோம்.

அதில், அவர் மனைவி ரமன்கீத் விமானநிலையத்துக்கு வந்து வேறு ஆணுடன் கொல்கத்தா செல்லும் விமானத்தில் சென்றுவிட்டது தெரிந்தது.

இது குறித்து மேலும் தகவல் அறிய கொல்கத்தா பொலிசாரை தொடர்பு கொள்ள கூறினோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை மறுத்துள்ள குர்மீத், பொலிசார் என்னிடம் சிசிடிவி காட்சிகளை காட்டவேயில்லை. என் மனைவியை நான் அங்கு பார்க்கவேயில்லை

ஒருவேளை என் மனைவியுடன் இருந்ததாக அவர்கள் கூறும் நபர், ரமன்கீத்தை மிரட்டி உடன் அழைத்து சென்றிருக்கலாம்.

ரமன்கீத்துக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை, நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.

என்னை விட்டு ரமன்கீத் ஓட நினைத்திருந்தால் துபாய்க்கு அவர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என கூறியுள்ளார்.

இதனிடையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியை சந்தித்துள்ள குர்தீப் தனது நிலையை கூறியுள்ளார். அது குறித்து உரிய விசாரணை விரைவில் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.