ஆற்றில் சிக்கியவரை துரிதமாக காப்பாற்றும் பொதுமக்கள்.. வீடியோ!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசுக்குறிச்சி ஆற்றில் சிக்கிய ஒருவரை பொதுமக்கள் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுக்குறிச்சி 16ம் தேதி காஜா புயலை வந்த போது பாலாற்றில் திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார் ஜாகீர் மகன் அமானுல்லா வயது (26). இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய அமானுல்லாவை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு காப்பாற்றியது அனைவரும் வாழ்த்தி வருகின்றனர். இதுபோல் வெள்ள நடவடிக்கையின் போது துரிதமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றுவது பொதுமக்களின் கடமையாகும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.