சிறார்களை மட்டும் குறிவைத்த வக்கிரம்… கல்லால் அடித்து கொன்ற கொடூரம்!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் சிறார்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கல்லால் அடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் நவம்பர் 13 ஆம் திகதி 3 வயது மட்டுமே பிராயம் கொண்ட குழந்தையை கொடூரமாக சிதைத்து கொலை செய்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவனை பொலிசார் கைது செய்தனர்.

20 வயதான சுனில் என்ற அந்த இளைஞரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் பல வெளியாகியுள்ளது.

இதுவரை 8 சிறுமிகள் வரை தாம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அதில் சிலரை கொலை செய்துள்ளதாகவும் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.

தெருவில் தனியாக அலையும் சிறார்களை மட்டுமே குறிவைக்கும் குறித்த இளைஞர், சொக்கலேட் அல்லது இனிப்புகள் ஏதேனும் தந்து அவர்களை மறைவான பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

பலாத்காரம் செய்வதற்கு முன்பு அவர்களின் ஒரு காலை கல்லால் அடித்து உடைப்பதாகவும், அந்த வலியில் அவர்கள் துடிக்கும்போது மட்டுமே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பலாத்காரத்திற்கு பின்னர் கல்லால் தலையை சிதைத்து கொலை செய்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நவம்பர் 13 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி சிறுமியின் பிறப்புறுப்பு மரக்கடையால் சிதைக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கால உடைக்கப்பட்ட நிலையிலும், தலையில் கல்லால் காயப்படுத்தியுள்ளதும், இதனால் சிறுமி மரணமடைந்துள்ளதும் பரிசோதனையில் தெரியவந்தது.

சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து மரக்கட்டையின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவையேறிய உணவும் சிறுமிகளும் தமது பலவீனம் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞரை கைது செய்ததன் மூலம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இதேப்போன்று நடந்த 4 வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.