கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பெங்களூரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது நிறைவு பெற்றவுடன்., இந்த கூட்டத்தில் பங்கேற்ற நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யு.டி.காதர் பேசியதாவது.,
கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏற்கனவே., மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில்., அந்த சுற்றறிக்கையில் உள்ள அம்சங்களை அனைத்து விதமான உணவகமும்., கடைகளும்., மதுபான விடுதிகளும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெங்களூர் மாநகராட்சியை பொறுத்த வரையில்., ஏற்கனவே பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்., தற்போது மாநிலம் முழுவதும் அதிரடியாக இந்த உத்தரவானது அமல்படுத்தப்படுகிறது. மேலும் விமான நிலையத்தில்., அனுமதியற்ற முறையில் விற்பனை செய்யப்படும் புகை பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் போன்றவற்றை தடை செய்வதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.
அந்த கடைகளில் அல்லது விடுதிகளில் புகைபிடிக்க தனியிடமானது தயார் செய்யப்பட்டு., அந்த இடத்தில் மட்டுமே புகை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு 18 வயது நிரம்பாதவர்கள் மற்றும் புகை பழக்கம் இல்லாதவர்களை அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் இந்த இடத்தில் புகைபிடிப்பதற்க்கான இடம் வைக்க மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினடம் அனுமதி பெற்ற பின்னரே தனி இடம் அமைக்க வேண்டும். இந்த சட்டங்கள் அனைத்தும் மீறப்படும் பட்சத்தில் உரிமங்கள் இரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல்., உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.