2019-ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற பொது தேர்தல், ஜூன் ஜூலை மாதங்களில் உலககோப்பை கிரிக்கெட் என பிஸியான காலகட்டத்தில் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் துவங்குகிறது.
ஐபிஎல் 2019 சீசனுக்கு தயாராகும் வகையில் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும், அணிகளுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டும் வருகின்றன.
2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான இப்போதே ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. அடுத்த மாதம் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் வீரர்கள் அணிகள் மாற்றிக்கொள்ளவும், ஏலம் எடுக்கப்படவும் உள்ளனர்.
அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான முக்கிய வீரர்களைத் தக்கவைத்தும், சிலரை விடுவித்தும், அதற்குப்பதிலாக புதிய வீரர்களைத் தேர்வு செய்தும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த, தக்கவைத்த வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஜான்ஸன், டாம் கரன், கேமரூன் டெல்போர்ட், ஜாவன் சீர்லஸ், இஷாங் ஜக்கி, அபூர்வ் வான்கடே, வினய் குமார் ஆகியோரை அந்த அணி விடுத்துள்ளது.
தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், நிதின் ராணா, ரிங்கு சிங், ஆன்ட்ரூ ரஷல், சுனில் நரேன், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, நாகர்கோட்டி, பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்டோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் ரூ. 15 .20 கோடி உள்ளது. இதனை வைத்து 12 புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த தொகையின் மூலம் 7 இந்திய வீரர்களையும், 5 வெளிநாட்டு வீரர்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.