கள்ளகாதலியின் ஆசையை நிறைவேற்ற செய்யத்துணிந்த காரியம்.!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சார்ந்தவர் தீபிகா (வயது 32). இவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரின் கணவரின் பெயர் விக்ரம் சிங். இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்., கடந்த மாதம் 27 ம் தேதியன்று மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் இவரின் கணவரான விக்ரமின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏலவே., அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இவரின் கள்ளகாதலியின் பேச்சை கேட்டு மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் விக்ரம் அளித்த வாக்குமூலமாவது., அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் விக்ரமிற்கு கடந்த சில மாதங்களாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த கள்ளத்தொடர்பானது கடந்த மாதம் இவரின் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இதனை கேட்ட தீபிகாவிடம் எப்படியோ சமாளித்த விக்ரம் தனது மனைவியிடம் நல்லவன் போலவே நடந்து வந்துள்ளார்.

ஆனால் மனைவிக்கு தெரியாமலே., கள்ளகாதலியிடம் அலைபேசியில் பேசி வந்து அவருடன் சேர்ந்துவாழ திட்டமிட்டுள்ளார். இதற்க்காக கள்ளக்காதலி விக்ரமிடம் தீபிகாவை விவாகரத்து செய்யவேண்டும் அல்லது கொலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். தனது மனைவியை கொலை செய்வதற்காக தனது கள்ளகாதலியுடன் திட்டமிட்டு., நைனிதாலுக்குச் சுற்றுலா அழைத்து சென்று கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

இவர்களின் திட்டப்படி தீபிகா எதனையும் அறியாமல் நைனிதாலுக்குச் சுற்றுலா சென்றாலும் அவரின் உடல் நலக்குறைவால் உயரமான மலைக்கு வர மறுத்துவிட்டார். கொலை முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் தனது ஊருக்கு வந்த விக்ரமிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கள்ளக்காதலி சில்பா., சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இந்த திட்டமானது நிறைவேறாததை விக்ரம் தெரிவிக்கவே., ஆத்திரமடைந்த சில்பா அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். இந்த செய்திகளை கவனித்த தீபிகா இன்னும் நீ திருந்தவில்லை., என்று வாக்குவத்தை துவங்கியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த விக்ரம் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்த தீபிகாவை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். மேலும் தனது மனைவி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடி வந்தது அம்பலமானது.

இந்த திட்டங்கள் அனைத்தும் இருவரும் வாட்ஸப்பில் உரையாடிய பின்னரே அனைத்தும் நடைபெற்றுள்ளது. இதனை ஆதாரமாக எடுத்துக்கொண்ட காவல் துறையினர் விக்ரமின் கள்ளக்காதலியை கைது செய்தனர். இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.