எரிபொருள் விலை தொடர்பான விலை சூத்திரம் வேறு முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விலை சூத்திரம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்திற்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்திற்கு மாற்றி புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த விலை சூத்திரத்திற்கு அமைய உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்பதுடன் குறையும் போது விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதும் விலை சூத்திரத்தை இரத்துச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.