வாடகைக்கு வீடு பிடித்து நடக்கும் கேவலம்.!!

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்திற்கு அருகில் உள்ள துடியலூர் விஸ்வநாதபுரத்தில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அறிந்ததும் துடியலூர் மகளீர் காவல்நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் ஆபாசமாக மற்றும் அரைகுறை ஆடைகளுடன் இருந்த சிலரை கண்ட அவர்கள்., காவல் துறையினரை பார்த்தவுடன் தப்பிச்செல்ல முயன்றனர். மேலும் அங்கிருந்த இரண்டு பெண்கள் மற்றும் வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இவர்களை கைது செய்த காவல் துறையினர்., காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் பெரியநாயக்கன்பாளையத்தை சார்ந்த லோகேஷ் (வயது 28)., இவரின் மனைவி சத்தியா மற்றும் தொண்டாமுத்தூரை சார்ந்த வெங்கடேஷின் மனைவியான நாகரத்தினம் (வயது 42) என்பவர்கள் கடந்த மாதத்தின் தொடக்கம் முதலாகவே., வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.

இந்த செயலில் ஈடுபட்ட மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., நீதிமன்றத்தில் சம்பர்ப்பித்து சிறையிலடைத்தனர். மேலும் இவர்களுடன் இருந்த இளம்பெண்ணொருவரை மீது காப்பகத்தில் சேர்த்தனர்.