இளம்பெண்ணை ஓட ஓட வெட்டிய மர்ம நபர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் கணேசன். கணேசனும் இவரின் மனைவி மஞ்சுளாவும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், கணேசனின் மனைவி திண்டுக்கல் சென்றுவிட்டு ஊர்திரும்பிய மஞ்சுளா, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்தொடர்ந்த வந்த மர்ம நபர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களால், மஞ்சுளாவை ரோட்டில் ஓடவிட்டு வெட்டியுள்ளனர் . இதில் சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனையடுத்து தகவலறிந்துவந்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, மஞ்சுளாவின் உறவினர்கள், திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பிவைத்தனர். மேலும், அந்த மர்மநபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.