16 வயது மாணவியை பலாத்காரம் செய்த காதலன்.!! மாணவி எடுத்த முடிவால் விபரீதம்.!!!

மதுரையில் உள்ள வடக்குமாசி வீதியை சார்ந்த 16 வயதுடைய சிறுமி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் செவிலியர் கல்லூரியில் பயின்று வருகிறார்.

அதே பள்ளியில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சார்ந்த அண்ணாதுரையின் மகனான மருதநாயகம் (வயது 19) என்பவர் பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் மதுரையை சார்ந்தவர்கள் என்பதால் எதார்த்தமாக பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாரி இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மதுரைக்கு விடுமுறைக்கு வந்த மாணவி திடீரென வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட மாணவியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவமனையில் மனைவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரிய வரவே., மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மாணவி மருதநாயகம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து மருதநாயகத்தின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து மருதநாயகத்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.