சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் சேவை எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருபவர் சதுர்வேதி. முதுகலை பட்டதாரியான இவர்., மாதம்தோறும் பௌர்ணமியன்று தனது அறக்கட்டளையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதையும்., தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும் கூறி வந்துள்ளார்.
மேலும் அரிசியை வைத்து வெண்பொங்களாக மாற்றி சித்து வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் பெண் பக்தர்கள் இவருக்கு சற்று அதிகமாகவே இருந்தனர். அந்த வகையில்., சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் வேலையில் உள்ள பிரச்னையை தீர்த்து வைக்க போலிசாமியார் சதுர்வேதியை சந்தித்துள்ளார்.
தொழில் பிரச்சனைகளை தீர்த்து வைக்க உதவி செய்வதாக அவர் தெரிவித்ததை அடுத்து தொழிலதிபர் அவரின் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சதுர்வேதி பற்பல பஜனைகளை மேற்கொண்டு பூஜை செய்துள்ளார்.
இவர் மேற்கொண்ட பூஜையின் காரணமாக தொழிலதிபரின் மகளும்., மனைவியும் பக்தையானபின்னர்., அவர்களை வசியம் செய்து வீட்டின் கீழ் தளத்தை அபகரித்து கொண்டு தனது தரிசனத்தை வழங்கி வந்துள்ளார்.
தொழிலதிபரின் வீட்டை அபகரித்த பஜனை சாமியார் அவரின் மகளையும்., மனைவியையும் தன்வசப்படுத்தி., விசேச பூஜை எனும் பெயரில் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் பஜனை சாமியார்.
இதனை அறிந்த தொழிலதிபர் வீட்டை விட்டு வெளியேறுமாறு பஜனை சாமியாரிடம் முறையிடவே., தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை ஆந்திராவிற்கு கடத்தி சென்றார்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்த தொழிலதிபரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., பஜனை சாமியார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த காவல் துறையினர்., அவர்வசம் இருந்த தொழிலதிபரின் மகளையும் மனைவியையும் மீட்டனர்.
இந்த சாமியார் தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில்., விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால்., அவனை பிடிக்க உயர்நீதிமன்றமானது கைது செய்யக்கோரி ஆணை பிறப்பித்தது. மேலும் சாமியார் வெளிநாட்டிற்கு தப்பிசெல்லமால் இருப்பதற்காக விமானநிலையங்கள் அனைத்திலும் காவல் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.