கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், பரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிந்து (வயது 40). இவர் மயநாட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
பிந்து மதிய உணவை சக ஆசிரியை, ஆசிரியர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் வழக்கம்போல் ஆசிரியகளுடன் பிந்து சாப்பிட்டார். அப்போது ஒரு ஆசிரியர் தான் கொண்டு வந்த செம்மீன் பிரியாணியை மற்ற ஆசிரியர்களுக்கு கொடுத்துள்ளார். அதனை ஆசிரியை பிந்துவும் வாங்கி சாப்பிட்டார்.
பிந்து சாப்பிட்டு முடித்த பிறகு, மதியம் வழக்கம்போல் வகுப்பில் இந்தி பாடத்தை நடத்த தொடங்கினர். அப்போது பிந்துவின் உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. உடல் முழுவதும் கொப்பளங்கள் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் பிந்துவை மீட்டு பரவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பரவூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். செம்மீன் சாப்பிட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு உணவு விஷமாகி விஷமாக மாறியதால், பிந்து இறந்து விட்டதாக முதல் கட்டவிசாரணையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.






