“மீன் பிரியாணி”!

தினம் ஒரு சமையலில் இன்று “மீன் பிரியாணி” செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மீன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – இரண்டரை கப்,
வஞ்சிர மீன் – 4 துண்டு,
தயிர் – அரை கப்,
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4, புதினா,
மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி,
எண்ணெய் – அரை கப்,
நெய் – கால் கப்,
உப்பு – 2 டீஸ்பூன்,
இஞ்சி + பூண்டு + பட்டை விழுது – 4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – சிறிது.
பழுத்த தக்காளி – 4,
பெரிய வெங்காயம் – 3,
கரம்மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

மீன் பிரியாணி செய்வது எப்படி?

  • பிரியாணி அரிசியை நன்றாக கழுவி ஊறவையுங்கள்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் நீளநீளமாக வெட்டிகொள்ளுங்கள்.
  • உப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா ஆகியவையை மீன் துண்டுகளில் தடவி எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
  • மீன் ஆறியவுடன் முள் மற்றும் தோலை நீக்கிவிட்டு சிறு, சிறு துண்டாக மீனை நறுக்கிவையுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்குங்கள்.
  • இவை அனைத்து நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு புதினாவையும் போட்டு, மீண்டும் வதக்க தொடங்குங்கள்.
  • இதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, தயிர், தக்காளி, மிளகாய்தூள், உப்பு போட்டு மீண்டும் நன்றாக வதக்குங்கள்.
  • இதையடுத்து அதில் வெந்நீர் 2 டம்ளர் விட்டு, கொதித்ததும் அரிசி போட்டு கிளறி மூடிவையுங்கள்.
  • தண்ணீர் வற்றிய உடன், சாதம் சேர்ந்தாற்போல வரும்போது மீனை அதில் போட்டு நன்றாக கிளறி மூடிபோட்டு, இறுதியில் தம் போடுங்கள்.

சுவையான மீன் பிரியாணி ரெடி. சூடாக பரிமாறுங்கள்!!