இராணுவத்தை தண்டிக்கும் நோக்கத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை இந்த அரசாங்கம் நீக்குமென நம்புவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றியிருந்தது.எனினும், இந்த சட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிச்சயம் இல்லாமல் செய்யும் என நான் நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.