அனைவருக்கும் நன்றி: இலங்கை அணி ஜாம்பவான் குமார் சங்ககாரா உருக்கம்

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் குமார் சங்ககாரா நேற்று முன்தினம் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து சங்ககாரா டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், என் பிறந்தநாளுக்கு அருமையான வாழ்த்துக்களை கூறிய அனைவருக்கும் நன்றி.

குழந்தைகளுக்கு காலை உணவு தயார் செய்யும் வேலையை தொடங்கினேன் என பதிவிட்டுள்ளார்.