3 முறை கலைந்த கர்ப்பம்: பெண் எடுத்த சோக முடிவு!

பிரித்தனியாவை சேர்ந்த பெண் ஒருவர், 3 முறை தனக்கு கர்ப்பம் கலைந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த டரியா பிளேஸிஜக், 34 என்ற பெண், அதிகமான ஊக்க மருந்து உட்கொண்டு கற்பனையில் தான் கர்பமடைந்திருபப்தாக மூன்று முறை நினைத்துள்ளார். பின்னர் அந்த கரு கலைந்து விட்டதாகவும், அதனால் தனிமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டரியாவின் சகோதரி மெரீயெட்டா கூறுகையில், டரியாவிற்கு அதிமான கவலையும், முதுகுவலியும் இருந்தது. எனக்கு எப்பொழுதாவது போன் செய்து பேசுவாள்.

ஒரு சில நேரம் நலமாக இல்லை என்பாள். பிறகு நலமாக இருக்கிறேன் என கூறுவாள். கடந்த வருட பாதியில் அவளுடைய அறைத்தோழி எனக்கு போன் செய்து டரியா உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதாக கூறினாள். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்து சரிபார்த்தோம். ஜனவரி மாதம் எனக்கு போன் செய்து அழுதாள். எனக்கு குழந்தை எதுவும் இல்லை. நான் தனியாக இருக்கிறேன். வாழவே பிடிக்கைவில்லை என கூறினாள்.

மார்ச் மாதம் என்னுடைய அம்மாவிற்கு போன் செய்து, எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தூக்குமாட்டி தற்கொலை செய்யப்போகிறேன் என கூறினாள். அதன் பிறகு எங்களுக்கு அவள் போன் செய்வதே இல்லை. எப்பொழுதாவது அதிக ஊக்கமருந்து எடுத்துக்கொண்டால் போன் செய்து பேசுவாள். அப்படி இரண்டு தடவை போன் செய்து கர்ப்பமாக இருக்கிறேன் என கூறினாள். ஆனால் அவள் உண்மையில் கர்ப்பமாக இல்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து டரியாவின் முன்னாள் காதலன் டொமினிக் பிராட்லி கூறுகையில், 10 வருடங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் வேலை செய்யும்போது தான் எங்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. எனக்கு தெரிந்து அவள் வலுவான வலி நிவார்ணியை எடுத்துக்கொள்வாள். மார்ச் 29ம் தேதி காலை போன் செய்து நான் மோசமானவள். எனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறினாள். எதுவும் சாப்பிட்டாயா? என நான் கேட்டதற்கு ‘ஆம்’ என அவள் பதில் கொடுத்தாள்.

உடனே அவளுடைய வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் அதன் பிறகு அவள் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்துவிட்டாள். பலமுறை கூட்டி செல்ல முயற்சி செய்தேன். அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள். ஏப்ரல் 22ம் தேதி கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் அது உன்னால் அழிந்துவிட்டது என எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

பின்னர் 27ம் தேதி ‘நான் நன்றாக இல்லை’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால். அதற்கு நான் அனுப்பிய பதில் செய்திக்கு அவள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய பொலிஸார், டோரியா அதிகமான போதை பொருட்களை உட்கொண்டு வந்ததால், கர்ப்பம் தரித்திருப்பதாக அவரே கற்பனை செய்துள்ளார். மேலும் குழந்தை இல்லாத காரணத்தால் அதிகமான மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.