முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி மரியம் நபடான்ஸி .இவரது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது.மேலும் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவரும் இவரே ஆவார்.
40 வயதான மரியம் நபடான்ஸி இரட்டைக் குழந்தைகள் 6 , 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனி தனியாக பிறந்த குழந்தைகள் என்று 44 குழந்தைகள் பிறந்திருக்கிறது.இதில் தற்போது 38 குழந்தைகள்தான் உயிருடன் இருக்கின்றனர்.
சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்ந்த மரியமுக்கு 12 வயது இருக்கும் போது 28 வயது நபருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர், தினமும் கணவர் இவரை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் தினமும் குடித்துவிட்டு விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தியே ஆக வேண்டும், மறுக்க முடியாத நரக வாழ்கை வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் மரியம் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது மட்டுமல்லாமல், வெளியில் சென்றும் வேலை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலும் நான் கர்ப்பத்தோடுதான் இருப்பேன். மேலும் குழந்தைகள் மூலமாகவே கொஞ்சம் மகிழ்ச்சியும் வாழ்க்கை மீதான ஈர்ப்பும் எனக்கு ஏற்பட்டது .எனது கணவருக்கு நான் மட்டும் மனைவி அல்ல. பல மனைவிகள் உள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை இரவில்தான் இங்கே வருவார். குடும்பம் நடத்துவார். அதிகாலை குழந்தைகள் கண் விழிப்பதற்குள் கிளம்பிவிடுவார்.
என் மூத்த மகனே 13 வயதில்தான் அவன் அப்பாவைப் பார்த்தான். என்னுடைய பல குழந்தைகள் இதுவரை அவர்களது அப்பாவை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.
மேலும் ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 பார் சோப் எங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறது.
பணக்கஷ்டம் இருந்தாலும் நான் தினமும் வேலைக்கு சென்று எனது பிள்ளைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். இதுவரை பட்டினி இருந்ததே கிடையாது. எனது குடும்பத்தை சந்தோஷமாக கவனித்து வருகிறேன் என்று மரியம் கூறியுள்ளார்.






